sivagnanasothyமீள்குடியேற்றத்திற்கென வடக்கில் நிர்மாணிக்கப்படும் வீடுகள், நவம்பர் 15ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 11ஆயிரம் வீட்டுத்திட்டத்தின்கீழ், எதிர்வரும் நவம்பரில் 5000 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி கூறியுள்ளார். இவற்றில் 1000 வீடுகள் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும், மிகுதி வீடுகளை பூர்த்திசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த வீடுகளில், தாயகம் திரும்பவுள்ள இந்திய அகதிமுகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் 320பேரும் குடியேற்றவுள்ளதாக சிவஞானசோதி கூறியுள்ளார். இதேவேளை, யுத்தத்தால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.