கைதுசெய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று பிற்பகல் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது திருமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள முன்னாள் மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். மேலும் அதனை நடாத்திவந்ததாக சந்தேகத்தின் பேரில் சிவகீதா மற்றும் அவரது கணவரும் கைதாகினர். இந்நிலையில் நடைபெற்று வந்த விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வரின் கணவர் உட்பட ஐந்து பேர் நேற்று பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் இன்றுகாலை ஏனைய நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விடயங்களை ஆராய்ந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா நான்கு பேரையும் நவம்பர் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.