ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முதலாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவிசாவளை மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது. பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்திருந்ததுடன், இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.