vavniayயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்றுகாலை 10.00மணி முதல் 12.00மணிவரை வளாகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப் பிரதிநிதிகளது முழுமையான பங்குபற்றுதலோடு பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும், கொலையை விபத்தாக காட்ட முனைந்தமைக்கான பொலிசாரின் சட்டத்திற்கு முரணான முயற்சியை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு முழமையாக விசாரிக்க வேண்டும், மனித உரிமை ஆணைக்குழு உள்ளுர், சர்வதேச மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளர்கள் இவ்வழக்கின் நீதி விசாரணையை முழுமையாக அவதானிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.