sddsdபொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மூன்றாம் வருட மாணவன் விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் இன்றுமாலை யாழ் உடுவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாணவனின் சொந்த ஊரான கந்தரோடைப் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சமய கிரியைகள் இடம்பெற்றதன் பின்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் மாணவனின் பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும் திரளான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து மாணவனின் பூதவுடல் அவரது இல்லத்திலிருந்து கே.கே.எஸ் வீதியில் சுன்னாகம் மருதனார்மடம் ஊடாக கொண்டு செல்லப்பட்டு உடுவில் மல்வம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ddf sads sdf sdfdfdf