sdsஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மனைவியுடைய வாகனம் நேற்றிரவு 8மணியளவில் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த வாகனத்தில் பயணித்த அமைச்சரின் மகன் மற்றும் வாகனத்தை செலுத்திய சாரதி ஆகிய இருவரும் விபத்து தொடர்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 49 வயதுடைய ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே மேற்படி விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.