img_9746

iyanaar03வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் தலைமையில் வெகு சிறப்பாக இளைஞர்களின் பங்களிப்புடன் 29.10.2016 அன்று காலை 9.00 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. 
இவ் இன்றைய நிகழ்வுகளில் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் முழுமையான முயற்சியில் திருநாவற்குளம் இளைஞர் கழக இளைஞர்களின் பங்களிப்புடனும் இவ் சமூக பணி முன்னெடுக்கப்பட்டது. 
வவுனியா இரத்த வங்கியில் கடும் இரத்த தட்டுப்பாடு நிகழும் இவ் வேளையில் இளைஞர்களின் இவ் மகத்தான பணி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), அவர்களும் சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், கழகத்தின் ஆலோசகர் திரு.மு.கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

img_9715 img_9716 img_9717 img_9718 img_9719 img_9726 img_9728 img_9729 img_9740 img_9743 img_9746 img_9748 img_9749 img_9766 img_9771 img_9772 img_9779 img_9782 img_9791 img_9793 img_9798 img_9806 img_9808 img_9811 img_9844 img_9852 img_9853 img_9861 img_9862 img_9863 img_9889 img_9891 img_9898