Header image alt text

ceylon-teachers-unionஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்று, ஆசிரியர்களாக அண்மையில் புதிதாக நியமனம் பெற்றவர்கள், கடந்த 4 மாத காலத்துக்குள் 800 பேர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாக இலங்கை ஆசியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் புதிதாக சுமார் 3 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களே தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ளனர். Read more

swordயாழ். பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் உள்ள சிறிய கடைக்குள் நேற்றிரவு புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது கடை உரிமையாளர் தன்னை பாதுகாத்து கொண்ட நிலையில் காயமின்றி தப்பிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தாக்குதலின் போது கடையில் இருந்த கண்ணாடிகளை தாக்குதல்தாரிகள் அடித்து நொருக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. Read more