ceylon-teachers-unionஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்று, ஆசிரியர்களாக அண்மையில் புதிதாக நியமனம் பெற்றவர்கள், கடந்த 4 மாத காலத்துக்குள் 800 பேர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாக இலங்கை ஆசியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் புதிதாக சுமார் 3 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களே தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ளனர். புதிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கியுள்ளதனால், பல வருடங்களாக தூர இடங்களில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் பெறமுடியாதுள்ளதாகவும் இலங்கை ஆசியர் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.