mahindaமலர் மொட்டினை சின்னமாகக் கொண்ட அபே சிறீங்கா நிதகஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சிறீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) என குறித்த கட்சி தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் புதிய தலைவராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் புதிய கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுனவினை நவம்பர் 18ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினமான அன்று அனுராதபுரத்தில் வைத்து இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.