dddddddddddddமுல்லைத்தீவு பிரமகுமாரிகள் ராஜயோக நிலையத்தின் கட்டிட சீரமைப்பு பணிகளுக்கு நிதியுதவியும், குமுழமுனை கலைவாணி சனசமூக நிலையத்திற்கு வாத்திய கருவிகளையும் மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் வழங்கியதோடு அவற்றுக்கான தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் தனது மாகாணசபை உறுப்பினருக்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் ஊடாக மேற்படி உதவிகளை வழங்கியுள்ளார். இன்று (03.11.2016) வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் மறைந்த வட மாகாணசபை பிரதித் தலைவரின் புதல்வர் ஜெகன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

ddddddddddddd dsc05445 dsc05447 yyyyyyyyyyyyyy