Header image alt text

vavuniya-ucவவுனியா நகரசபையின் புதிய செயலாளராக இராசையா தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் மன்னார் பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய இவர், நேற்றைய தினம் வவுனியா நகரசபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வவுனியா நகரசபையின் செயலாளராக இருந்த ரி.தர்மேந்திரா, யாழ்ப்பாணம் உள்ளுராட்சி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து குறித்த பதவிக்கு வெற்றிடம் நிலவியது. இதனையடுத்தே வவுனியா நகரசபைக்கு புதிய செயலாளராக இராசையா தயாபரன் நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

avant gardeஅவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் அடங்கிய கப்பலின் கெப்டனான உக்ரைன் நாட்டுப் பிரஜை கெனாட் குரொரிலோவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றத்தில் எவன்கார்ட் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை கப்பலின் கெப்டன் உக்ரைன் பிரஜை கெனாட் குரொரிலோ காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக ஆஜர்ப்படுத்தப்பட்டார். Read more

srilanka indiaஇந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நான்காவது வருட பாதுகாப்பு மாநாடு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ஸ்ரீ.ஜி.மேகன் குமார் மற்றும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் இணைத்தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ஸ்ரீ.ஜி.மேகன் குமார் ஆகியோரும் நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.

dddயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எஸ்.சதீஸ்கரன் உத்தரவிடப்பட்டுள்ளார். Read more

sri-kantha-teloயாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டம் ஒன்றை கூட்டுமாறு ரெலோ கட்சி ஏழு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதி காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
Read more

jaffna-university-studentயாழ். கொக்குவில், குளப்பிட்டியில் உயிரிழந்த மாணவர்களில் விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24), துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்ததுடன்,

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றைய மாணவரான கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், மரண விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார். Read more

ferosஐ.நா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி நாளை மறுநாள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

முதல் முறையாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், வரும் 9 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என்றும், கொழும்பி லும் யாழ்ப்பாணத்திலும் பேச்சுக்களில் ஈடுபடுவார் என்றும் பிரித்தானியா அறிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவ தற்கும், ஊழலுக்கு எதிராக இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் பிரித்தானியாவின் ஆதரவை அமைச்சர் பரோனஸ் அனெலி வெளிப்படுத்தவுள்ளார். Read more

arjun mahendran (2)தான் ஒரு குற்றவாளியென இதுவரை உறுதியாகவில்லை என, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாட்டுக்கு திரும்பிய வேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தான் வெளிநாடு சென்றது தனது நெருங்கிய நண்பரின் திருமணத்தின் நிமித்தமே என சுட்டிக்காட்டிய அவர், தவறிழைக்காத நிலையில் தாம் நாட்டை விட்டு தப்பிச்செல்ல வேண்டிய தேவையெதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். Read more

sssசூரியகலத்தை பயன்படுத்தி சூரிய ஒளி மூலம் பாடசாலைகளுக்கு மின்சார வசதியை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் கொரிய நாட்டு பிரதிநிதி கிம்ஜிங் ஹோவ் அவர்ககுக்கும் இடையில் கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.  இந்த கலந்துரையாடல் மூலம் பாடசாலைகளுக்கு சூரிய ஒளி ஊடாக மின்சாரம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. Read more