srilanka indiaஇந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நான்காவது வருட பாதுகாப்பு மாநாடு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ஸ்ரீ.ஜி.மேகன் குமார் மற்றும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் இணைத்தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ஸ்ரீ.ஜி.மேகன் குமார் ஆகியோரும் நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.