sri-kantha-teloயாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டம் ஒன்றை கூட்டுமாறு ரெலோ கட்சி ஏழு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதி காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
தமிழர் தரப்பு கட்சிகளான இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கே தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ) அழைப்பு விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.