Header image alt text

677நுவரெலியா கலுகலை அபேபுர பகுதியில் இன்று மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், அதில் புதையுண்ட ஐவர், மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நுவரெலியா கலுகலை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அபேபுர பகுதியில், புதிதாக அமைக்கப்பட்டுவரும் கட்டடமொன்றில், பணியாட்கள் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர். Read more

e345343மட்டக்களப்பு, சவுக்கடிப் பகுதியில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள், நேற்றுமாலை, மைலம்பாவெளி முகாம் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

சவுக்கடிப் பகுதியில் மரமுந்திரிகைத் தேட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, உரப்பபை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் கைக்குண்டுகள் 4, வெற்று மகசீன்கள் 2, ரீ56 ரக துப்பாக்கி ரவைகள் 4, சயனட் குப்பி மற்றும் அடையாளத்தகடு ஆகியன மீட்கப்பட்டுள்ளன. Read more

mannarதலைமன்னாரில் இருந்து நேற்றுஇரவு, கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு, இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், மன்னார் – புதுக்குடியிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான முஹம்மது நஜிபுதீன் (வயது29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலைமன்னார்-மன்னார் பிரதான வீதி சின்னக்கருசல் பகுதியிலுள்ள புகையிரத வீதியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

eeeeவட மாகாண அமைச்சர்களின் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழு முறையாக செயற்படவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் ஊடகச் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பத்மராசா மற்றும் ஓய்வுபெற்ற அரச அதிபர் பத்மநாதன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். Read more

dgfgfவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் பின்னர்; தாயும் சேயும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வைத்தியசாலையில் பிரசவத்திற்காக நிலுக்கா வீரசிங்க (32) என்ற பெண் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இன்றுகாலை சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும், அதன் பின்னர் அதிக குருதிப்பெருக்கு காரணமாக அவசர சிகிக்சை பிரிவிக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். Read more

sdfdfdநுவரெலியா மாவட்டம் மந்தாரநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை கோணபிட்டிய தோட்டத்தில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக, அங்குள்ள லயன் குடியிருப்பொன்று தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள 56ஆம் இலக்க குடியிருப்பு பகுதியிலேயே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர், கோணபிட்டிய தோட்டத்திலுள்ள முன்பள்ளி பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Read more