mannarதலைமன்னாரில் இருந்து நேற்றுஇரவு, கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு, இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், மன்னார் – புதுக்குடியிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான முஹம்மது நஜிபுதீன் (வயது29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலைமன்னார்-மன்னார் பிரதான வீதி சின்னக்கருசல் பகுதியிலுள்ள புகையிரத வீதியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்றுகாலை சடலத்தைக் கண்ட கிராம மக்கள் மன்னார் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மன்னார் பொலிஸார், சடலத்தை மீட்டதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதெவேளை நீர்கொழும்பு கந்தானை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி பெண் உயிரிழந்துள்ளார்.

ரயில் கடவையில் சென்றபோது, கொழும்பு புறக்கோட்டையிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டுள்ளார். கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 46வயது பெண், இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் சடலம், ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.