eeeeவட மாகாண அமைச்சர்களின் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழு முறையாக செயற்படவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் ஊடகச் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பத்மராசா மற்றும் ஓய்வுபெற்ற அரச அதிபர் பத்மநாதன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இந்த முறைப்பாட்டுக்குழுவில், முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்கு வட மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு நேற்றைய தினம் சென்றிருந்த போதும் அங்கு எதுவித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்று அந்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.