vali-northயாழ். வலிகாமம் வடக்கில் கையளிக்கப்பட்ட காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி காங்கேசன்துறை தெற்கு, வேவெரிக் கிராமத்திற்கான காணிகளை சுத்தப்படுத்தி அடையாளப்படுத்தும் நடவடிக்கை இன்றுகாலை ஆரம்பிக்கப்பட்டதாக ஜே 235 கிராம சேவகர் நடேசபிள்ளை ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரிடமிருந்த வேவெரிக் கிராமத்தை சேர்ந்த 20 குடும்பங்களுக்கான காணி கடந்தவாரம் ஜனாதிபதியால் காணி உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. அந்த காணிகளில் மக்கள் பிரவேசிப்பதற்கு நேற்று அனுமதியளிக்கப்பட்டது.
சுத்திகரிப்பு நடவடிக்கையின் பின்னர் நாளை காணி அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நீண்டகாலத்தின் பின்னர் தங்களது சொந்த இடத்தினை பார்வையிடுவதற்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.