drawnயாழ். தொண்டமானாறு கடலில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனந்தகுமார் ஜெயபிரகாஸ் வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கந்தசஷ்டியின் இறுதி நாளான நேற்று சூரன் போர் பார்ப்பதற்கு, மேற்படி சிறுவன் உறவினர் ஒருவருடன் செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் உறவினருக்கு தெரியாமல் சிறுவன் அருகில் உள்ள கடலில் சென்று நீராடியுள்ளான்.
இதன்போது, குறித்த சிறுவன் கடலில் மூழ்குவதைக் கண்ட ஏனைய பக்தர்கள் அவனை மீட்டு வல்வெட்டுத்துறை வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.