policeபதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் இடம்பெறும் 85வது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று அதிகாலை பூஜித்த ஜெயசுந்தர அந்த நாட்டுக்கு சென்றுள்ளார். குறித்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை இடம்பெறவுள்ளதோடு, 190 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.