humanபயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் யாழ். கொக்குவில், திருநெல்வேலி மற்றும் சில்லாலைப் பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கபில்நாத், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கெங்காதரன் பிருந்தாபன், சில்லாலைப் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் அரவிந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
சீருடை மற்றும் சிவில் உடையில் வந்தவர்களே கைது செய்து கொண்டு சென்றதாகவும், கைதுக்கான காரணங்கள் எவையும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை எனவும் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.