ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தனது வங்கிக்கணக்கை முடக்கியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.இதன் பிரதிவாதிகளாக மத்திய வங்கியின் நிதிப் பணிப்பாளர், காவற்துறை நிதி குற்றங்கள் பிரிவின் தலைமை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 8 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவற்துறை ஊடாக கைது செய்வதற்கு கடந்த தினத்தில் கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.