இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.
அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது. இருந்தபோதிலும் 2017 அம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலைய ஓடு பாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆகையினால் குறிப்பிட்ட நேரம் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படவுள்ளது. இதன்போது மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.
தேசிய முகைமைத்துவ மாநாடு இன்றுகாலை கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.