dfsgfgகனேடிய வெளிவிவகாரங்கள் (வெளிநாட்டு அலுவல்கள், வியாபாரம் மற்றும் அபிவிருத்திப்பிரிவு) ஆய்வாளர் மக்லாரன் மற்றும் கனேடிய அரசியல் உயர் ஆலோசகர் அலுவலகத்தின் ஆய்வாளர் ஜவாத் குரேஷி ஆகியோர் இன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அண்மையில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை தேவைகளை பெற்றுத்தர கனேடிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை எதிர்காலத்தில் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜவாத் குரேஷி தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.