courts (1)புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்களை, மேலும் மூன்றுமாத காலத்துக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றுக்கு, யாழ்.மேல் நீதிமன்றம், இன்று அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் 12 சந்தேகநபர்கள் இதுவரைக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை தாண்டியுள்ளது. அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க, இன்றையதினம் யாழ்.மேல் நீதிமன்றில் அனுமதி கோரப்பட்டு, ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.