budget-2நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவதும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 70ஆவதும் வரவு செலவுத் திட்டத்தின் மொத்த வருமானம் 2098 பில்லியன் ரூபாயாகவும் மொத்த செலவீனம் 2723 ரூபாயாகவும் காணப்பட்டது. வரவுசெலவுத் திட்ட துண்டுவிழும் தொகையாக 625 பில்லியன் ரூபாய் அமைந்துள்ளது.

எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வருமாறு,

05:06 PM – 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாசிப்பு நிறைவுபெற்றது 

05:06 PM – வரவு – செலவுத்  திட்டத்தை வாசித்து முடித்தார் நிதியமைச்சர்.

05:05 PM – பழைய வாகனங்களின் ஏற்றுமதிக்கு வரி நிவாரணம்

05:04 PM – இலங்கையிலுள்ள 100 மிகப்பெரிய தனியார் கம்பனிகளை அரசாங்கத்துடன் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். 

05:04 PM – தன்னியக்க டெலர் இயந்திரங்கள் மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் 10 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

05:04 PM – இணையத்தள பரிமாற்றங்களுக்கு வரி அறவிடப்படும். 

05:03 PM – பழைய வாகன ஏற்றுமதிக்கு வரிச்சலுகை.

05:02 PM – 100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு.

05:02 PM – இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்கப்படும்.

05:01 PM – பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும் 

05:01 PM – கார்பனுக்கு புதிய வரி.

05:00 PM – சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.

05:00 PM – பெல்மடுல்லவில், அனர்த்த முகாமைத்துவ மையமொன்று அமைக்கப்படும் 

05:00 PM – 425 கிராம்  நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ‌ரூபாய்.

04:59 PM – உள்நாட்டு பால்மா 250 கிராமின் விலை 250 ரூபாய்.

04:58 PM – மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை  5 ரூபாயால் குறைப்பு.

04:57 PM – வௌ்ளை சீனி, கிலோகிராமொன்று 2 ரூபாயால் குறைப்பு.

04:57 PM – நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை  5 ரூபாயால் குறைப்பு.

04:57 PM – உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.

04:56 PM – பருப்பு ஒரு கிலோகிராமின் விலை  10 ரூபாயால் குறைப்பு.

04:56 PM – பயறு ஒரு கிலோகிராமின் விலை  15 ரூபாயால் குறைப்பு.

04:56 PM – வருமான வரி மீள்பரிசீலனை செய்யப்படும் 

04:54 PM – நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரையான நேரத்தில் 50 ரூபாயாக குறைக்கப்படுகின்றது 

04:54 PM – லக் சதொசவுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. ஒவ்வொரு சதொசவுக்கு 10,000 ரூபாய் 

04:53 PM – சூரிய சக்தி திட்டங்களுக்கான கடனுக்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:53 PM – சதொச சில்லறை விற்பனை நிலையங்கள் 100-ஐ நிர்மாணிக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:52 PM – மாத்தறை கடற்பிராந்திய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:51 PM – பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன 

04:50 PM – ரியல் ஸ்டேட் மேலாண்மை தகவல் அமைப்பு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குள் உள்ளடக்கப்படும் 

04:49 PM – சிறிய குளங்களுக்காக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:49 PM – நஞ்சற்ற நாடு திட்டத்துக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

04:48 PM – நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் 1,750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:47 PM – கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச சேவையாளர்களுக்கான 1000 சேவை நிலையங்களை அமைப்பதற்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:45 PM – அரச சேவையாளர்கள் 14 இலட்சம் பேர் இருந்தாலும், பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோருக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

04:44 PM – பொதுச்சேவைகள் குறித்தான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படும் 

04:43 PM – பொதுச் செயலாளர் பொதுப்பணித் துறையை ஆய்வு செய்தல் 

04:42 PM – இளைஞர்களது திறமைகளை வளர்க்க, 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:41 PM – புதிதாக துறவியாகுபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 2,500 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படும்.  இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:41 PM – வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆகக்குறைந்த ஊதியமாக 300 டொலர்.

04:40 PM – ஊடகவியலாளர்கள், உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு, 50 வீத மானியத்தின் கீழ், 150,000 ரூபாய் கடன்.

04:39 PM – சமய ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:38 PM – ஊடகத்துறையிலுள்ளவர்களுக்கு 300,000 ரூபாய் கடன் வசதி 

04:38 PM – சுகததாச விளையாட்டரங்கு புதுப்பிக்கப்படும். இதற்கு, 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.  

04:37 PM – இளைஞர்  தொழில் பயிற்சி மையங்களுக்காக 4,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:37 PM – பண்டித் அமரதேவ கலாசார நிலையத்துக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:36 PM – போதைப்பொருளுக்கு எதிரான பொலிஸ் பிரிவுக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:36 PM – வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப 180 மில்லியன் ஒதுக்கீடு.

04:34 PM – தேசிய இளைஞர் படையணிக்கு 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:34 PM – நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுக்கும் 1 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:34 PM – சர்வதேச வெசாக் உற்சவத்துக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:33 PM – புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஜனாதிபதி நிதியத்துக்கு 500 மில்லியன் ரூபாய் நிதியொதுக்க புகையிலைநிறுவனத்துக்கு யோசனை.

04:33 PM – பட்டதாரிகளுக்கான தொழிற்றுறையொன்றை ஏற்படுத்துவதற்காக, 1.5 மில்லியன் ரூபாயை, வட்டியின்றி வழங்க நடவடிக்கை. இதற்காக, 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

04:32 PM – ரயில்வே துறையில் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

04:31 PM – ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

04:30 PM – வாழ்க்கைப்பூராகவும் நீடிப்பதற்கான அக்ரஹார திட்டத்தை நீடிக்க திட்டம் 

04:30 PM – ஓய்வூதியக் கொடுப்பனவுத் திட்டமானது, வெடிக்கும் நிலையிலிருக்கும் குண்டாகும். ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக, 1000 மில்லியன் ரூபாய்.

04:28 PM – இராணுவத்தினருக்கான கொடுப்பனவை வழங்க 3500 மில்லியன் ரூபாய்.

04:28 PM – அரசாங்க வீட்டுத்திட்டங்களில்  10 வருடங்களுக்கு மேல் வாழ்தோர் அவர்களது வீட்டின் உரிமத்தை மாற்றுவதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:28 PM – படையினரின் கொடுப்பனவுக்கு 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:28 PM – சமுர்திப் பயனாளிகளின் வருமானம் அதிகரிக்கப்படும். அத்துடன், சமுர்த்தி வேலைத்திட்டம், “ஜன இசுறு” என்று பெயர் மாற்றப்படும்.

04:26 PM – மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 40 சதவீத கடன்

04:26 PM – தோட்டத்தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகள் 

04:25 PM – வடக்கு கிழக்கின் வீடமைப்புக்களை வேகமான முன்னெடுப்பதற்கு 5000மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:25 PM – 15 வருடங்களுக்கும் மேலாக அரச வீடுகளில் வசித்துவருவோருக்கான வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது, ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க, 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 

04:23 PM – தேசிய சேமிப்பு வங்கி மற்றும் வீடமைப்புத்துறை வங்கி ஆகியன ஒன்றிணைந்து 7 சதவீதக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 

04:23 PM – நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக முகவர் நிறுவனமொன்று அமைக்கப்படும். அதற்கு 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் 

04:19 PM – பெருந்தோட்டத்துறை தோட்டத் தொழிலாளர்களுக்கான 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இதற்கான காணிகள், அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும்.

04:19 PM – மார்ச் 31ஆம் திகதியிலிருந்து புதிய உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

04:18 PM – நிதி பரிமாற்ற நிறுவனங்கள் 200 ஆரம்பிக்க அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும்.

04:18 PM – பிரமிட் திட்டங்கள் மற்றும் கடன் வசூலிப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு எதிரான சட்டங்கள், நிதி நிறுவனங்கள் வரை நீடிக்கப்படும் 

04:17 PM – நிதி முகாமைத்துவம் தொடர்பான நிறுவனமொன்று உருவாக்கப்படும்.

04:17 PM – நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிமுகப்படுத்தப்படும் 

04:17 PM – மின்சாரத்தை குறைந்த விலையில் மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பது உறுதி செய்யப்படும்.

04:16 PM – திருகோணமலை நீர்த்திட்டத்தை அபிவிரு‌த்தி செய்வதற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:16 PM – 2018ஆம் ஆண்டளவில், புகையிரதம் மற்றும் இலங்கை போக்குவரத்துக்குச் சேவைகள் சுய நிதியுதவியில் இயங்கும் 

04:14 PM – நாடளாவிய ரீதியான குடிநீர்த்திட்டங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:14 PM – இலத்திரனியல் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:14 PM – முச்சக்கரவண்டி மற்றும் வான்களை கட்டுபடுத்த நிறுவனம்.

04:13 PM – புகையிரதம் மற்றும் பஸ்களில் அட்டைகளின் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான திட்டம் 

04:13 PM – 32 ஆசனங்களைக் கொண்ட பாடசாலை வான்களுக்காக 75 சதவீத வட்டி விலக்களிப்புக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:13 PM – 10 வருடங்களுக்கும் பழமையான ஹோட்டல்களுக்கு மீள் புனரமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:11 PM – கூட்டங்கள், மாநாடுகள், ஊக்குவிப்புகள், கண்காட்சி கைத்தொழிலுக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:11 PM – பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களுக்கு பதிலாக 35 இருக்கைகளைக் கொண்ட பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கு ஊக்கச் சலுகை வழங்கப்படும். 

04:09 PM – முச்சக்கரவண்டிகளுக்கு பதிலான இலத்திரனியல் கார்கள் பெற்றுக்கொடுக்கப்படும். அதற்காக 1000 வாகனங்களை இறக்குமதிச் செய்ய 50 சதவீதம் வட்டி குறைப்பு.

04:08 PM – பதுளைக்கு நெடுஞ்சாலைகளை அமைப்பது சாத்தியமான என்பது குறித்து ஆராயப்படும் 

04:08 PM – மத்திய மற்றும் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.

04:07 PM – உல்லாசப ்பயணிகளுக்கான இலத்திரனியல் விசா முறை அறிமுகப்படுத்தப்படும். 

04:07 PM – சுற்றுலா வீடுதிகளில் குறைந்த அறைக் கட்டணம் இனங்கண்டு அறிவிக்கப்படும்.

04:06 PM – நெனோ தொழில்நுட்பத்தை இலங்கையிலுள்ள கல்வி நிறுவகங்களில் அறிமுகப்படுத்துவதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:05 PM – சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இதற்கு சுற்றுலா முக்கோண வலயம் அமைக்கப்படும். 

04:05 PM – தெற்கு அதிவே நெடுஞ்சாலை பதுளை வரை விருத்திச் செய்யப்படும்.

04:05 PM – நிர்மாணத் துறைக்காக விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதித் தீர்வை நீக்கப்படும்.

04:05 PM – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பங்களுக்காக 1,306 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

04:04 PM – இணையத்தள பயணத்துறையில் பொதுவான தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் 

04:03 PM – பதுளையில் உள்நாட்டுக்கான விமானிநிலையம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் உண்டு 

04:03 PM – மொபிடல் நிறுவனத்தை பொதுக் கம்பனியாக பட்டியற்படுத்தல்

04:02 PM – ஸ்ரீ லங்கன் எயார்லைன் மற்றும் மிஹின் எயார் வர்த்தகரீதியாக்கப்படும் 

04:01 PM – நனோ தொழிநுட்ப நிறுவனங்களுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:01 PM – துறைமுகத்தில் 12 மணித்தியாலங்கள் நங்கூரமிடுவதற்கு இலவசம்.

04:00 PM – நாட்டில் வளர்ச்சி குன்றிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்ளுக்கு வரி விடுமுறை அறிக்கப்படும் 

03:58 PM – கடல் மையங்கள் குறித்து முக்கிய நோக்கம் செலுத்தப்படுகின்றன. கடல் சார் அதிகாரங்கள் நிறுவப்படும் 

03:58 PM – இலங்கையை, ஆசியாவின் கேந்திர மத்திய நிலையமாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

03:57 PM – அரச வியாபாரங்களை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:56 PM – இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கிக்கான தேவை ஏற்பட்டுள்ளது 

03:54 PM – வர்த்தகத்துறைக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

03:53 PM – கொழும்பு வர்த்தகக் கண்காட்சியை அடுத்த வருடம் நடத்துவதற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:53 PM – ஏற்றுமதி கைத்தொழில் பேட்டைகள் 15 ஆரம்பிக்கப்படும்.

03:52 PM – இலங்கையின் பெயரை பிரசித்தபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:51 PM – இலங்கையின் உற்பத்திகளுக்கும் தேவைகளுக்கும் பன்முகத்தன்மை தேவை 

03:50 PM – பெருநகரங்களுக்காக நிதியமைச்சினால் 750 மில்லியன் ரூபாய் நேரடி முதலீடு 

03:49 PM – ஆடைத் தொழிற்துறைக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை.

03:49 PM – 100 மில்லியன் மற்றும் 500 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுபவர்களுக்கு விசேட ஊக்கச்சலுகைகள் வழங்கப்படும் 

03:48 PM – தொழிநுட்ப இயந்திரங்களின் இறக்குமதிக்காக 75 சதவீத வரி விடுவிப்பு.

03:47 PM – சரியான முதலீட்டாளர்களுக்கு 5 வருடங்களுக்கான விசா 

03:47 PM – ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய பகுதிகளில், அமெரிக்க டொலர் 3 மில்லியனுக்கும் மேலதிக வர்ததகத்தை மேற்கொள்வதற்கு, 100 சதவீத முதலீட்டுக் கொடுப்பனவுகள். 

03:47 PM – 500 மில்லியன் ரூபாய்க்கு அதிக முதலீடு தொடர்பில் ஊக்குவிப்புத் திட்டம்.

03:45 PM – வடக்கில் வர்த்தகங்களை முன்னெடுப்பதற்கு 200 சதவீதமான முதலீட்டு கொடுப்பனவுகள் 

03:44 PM – செல்வத்தை உருவாக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.

03:43 PM – உப்பு உற்பத்தி நிறுவனங்கள் துன்பநிலையில் உள்ளன.ஆகையால், அவற்றை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை.

03:43 PM – சுகாதார அமைப்புக்களை பலப்படுத்தும் வகையில், அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளும் நோயாளிகளுக்கு செலவுத்தாள் ஒன்றை வழங்குதல் வேண்டும் 

03:43 PM – பெறுமதி சேர்க்கப்பட்ட வியாபாரங்கள் ஊக்குவிக்கப்படும்.

03:41 PM – செலவாணி கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு மாற்றீடு கொண்டுவரப்படும் 

03:39 PM – ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் மத்திய ஓய்வூதிய நிதி சீரமைக்கப்படும் 

03:38 PM – சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கடன்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

03:38 PM – மனித வளத்தை வழங்கும் நிறுவனங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது 

03:37 PM – சிறு வியாபாரிகளுக்கு சலுகைக் கடன்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.

03:37 PM – கடைகள் இரவு 11 மணி வரை திறந்து வைக்கப்படுதல்  வேண்டும். இதற்காக 11 மணிவரைக்கும் தனியார் பஸ்களை இயக்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது 

03:34 PM – ஒவ்வொரு நோயாளியும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, சிகிச்சைக்காக செலவு செய்யப்பட்ட செலவு தொடர்பிலான பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

03:34 PM – 500,000 ரூபாய் பெற்று அதனால் கடன் தகவல் பணிகயத்தில் பெயர் பதியப்பட்டதால், அவதிப்படுவோர்க்கு, அவர்களது வர்த்தகத்தை தொடர்ந்து செய்துக்கொண்டுச் செல்வற்கு அனுமதி 

03:33 PM – அனைத்து ஒளடத நிலையங்களும், ஒளடத அதிகார சபையில் பதிவு செய்யப்படல் வேண்டும்.

03:32 PM – வணிகங்கங்களை பதிவு செய்வதற்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு  

03:31 PM – வியாபார நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

03:31 PM – பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாத காணிகளை, வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

03:30 PM – வியாபாரங்களை மேற்கொள்வதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும்.

03:30 PM – பதிவு செய்யப்படாத மருந்து கடைகளை  நடத்திச் செல்வோரை கைதுசெய்து 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தல்

03:30 PM – கராப்பிட்டி, யாழ்ப்பாணம், அம்பாறை ஆதார வைத்தியசாலையில் குழந்தை மையங்களை அமைப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

03:28 PM – அனைத்து மருந்தகங்களும் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் 

03:28 PM – தாதியர் பயிற்சிப் பாடசாலைகளுக்காக, 200 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு.

03:28 PM – தேசிய அறக்கட்டளைக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:26 PM – தொழில்சார் கல்விக்கான தரத்தை ஏற்படுத்துவதற்காக, 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:26 PM – வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:26 PM – பாலர் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தவணை முறையிலும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவர். 

03:25 PM – பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பகிடிவதை குறித்து அறிவிப்பதற்கு நிலையங்கள் அமைக்கப்படும் 

03:22 PM – களனி பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்  

03:22 PM – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்துக்கு, வெட்டுப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு இணையும் மாணவர்கள் 15 ஆயிரம் பேருக்கு, 8 இலட்சம் ‌ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

03:21 PM – நல்ல பெறுபேறுகளை பெறும் மாணவர்ளுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் 

03:21 PM – வௌிநாட்டு மாணவர்கள் 500 பேர், இலங்கையில் கல்வி கற்பதற்கு 500 விசாக்கள் வழங்கப்படும்.

03:21 PM – கல்விச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச மாணவர்ளுக்கான  ஒன்றுக்கு மேற்பட்ட விசாக்கள் வழங்கப்படும 

03:19 PM – பட்டப்படிப்புக்களை மாணவர்களுக்கு வழங்கும் வாய்ப்பு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 

03:18 PM – எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குபின்னர், பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புக்கள் இரவு 8 மணிவரை நீடிக்கப்படும்
 

03:17 PM – பல்கலைக்கழக மாணவர்கள், சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:16 PM – இளைஞர் – யுவதிகளுக்கான உயர்க் கல்வியை வழங்கும் நடவடிக்கையை, அரசாங்கத்தினால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது. அதற்கு, தனியார்த் துறையினரும் முன்வர வேண்டும்.

03:16 PM – கராப்பிட்டிய வைத்தியசாலையில் 10 மாடிக்கட்டடம் அமைக்கப்படும். 

03:15 PM – பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக, 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

03:15 PM – யாழ்ப்பாணம், ஜயவர்த்தனபுர, களனி, பேராதெனிய, ருஹுணு ஆகிய பல்கலைக்கழகங்களிலுள்ள பாடங்கள் தொடர்புடைய கல்விமுறைமை அறிமுகப்படுத்தப்படும் 

03:14 PM – பல்கலைக்கழக மாணவர்களை, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி பயில 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

03:13 PM – சுகாதார காப்புறுதிக்காக 2,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

03:13 PM – ஜயவர்தனபுர, களனி, யாழ்ப்பாணம், பேராதனைப் பல்கலைக்கழகங்களில், கல்விசார் பட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை

03:12 PM – புள்ளிவிவரவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்காக, 13 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:12 PM – பாடசாலையில் நல்ல பெறுபேறுகளை வெ ளிப்படுத்தும்  மாணவர்களுக்கு புதிய புலமைப்பரிசில் திட்டங்கள். இவர்களுக்கு மாதந்ததம் 2,000 ரூபாய் வழங்கப்படும்  

03:11 PM – பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்க்கல்வியைத் தொடர்வதற்கான மாணவர் இணைப்பு, 2020ஆம் ஆண்டில் 50 ஆயிரத்தினால் அதிகரிக்கப்படும்.

03:11 PM – சுகாதார வசதிகளுக்காக  5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

03:11 PM – 2020இல், பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50,000 ஆக அதிகரிக்கப்படும்.

03:10 PM – கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்த போதிலும், முதலீடுகள் தேவையான பிரிவுகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

03:10 PM – தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விதிமுறைகள் கொண்டுவரப்படும் 

03:10 PM – 5 வயது முதல் 19 வயது வரையான 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு, ஒரு பிள்ளைக்கு 2 இலட்சம் ரூபாய் வீதம் காப்புறுதி வழங்க நடவடிக்கை

03:09 PM – சிறுவர்களுக்கான 200,000 காப்புறுதிகளும் சேமிப்புக்கணக்கும் 
 

03:09 PM – கேகாலை மற்றும் பதுளையிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

03:08 PM – விசேட கல்வியை பெறும்  மாணவர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு 50 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக அதிகரிப்பு

03:07 PM – விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக 175 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:07 PM – 2017ஆம் ஆண்டில் 100 பாடசாலைகளில் நீர் , மின்சார வசதிகளுக்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

03:06 PM – கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரணதரம் ஆகியவற்றுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்

03:06 PM – பாடசாலைகளுக்கான அடிப்படை தேவைகளை வழங்கும் பொருட்டு 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

03:05 PM – கல்வித்துறையை மேம்படுத்துவற்காக, 17840 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு  

03:04 PM – உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் 

03:02 PM – பாடசாலை மாணவர்களுக்கு இலவச டெப்கள் வழங்கப்படும். Wifi அமைத்துக்கொடுக்கப்படும் . இதற்கு 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு  

03:01 PM – கல்விக்கு 90,000  மில்லியன் ‌ரூபாய் நிதி ஒதுக்கீடு

02:59 PM – கும்புக்கன் ஓயா திட்டம் மொனராகலை மாவட்டத்தில் செயற்படுத்தப்படும்.

02:58 PM – 50 வேலாண்மை ஆய்வு நிலையங்களை  அமைப்பதற்கு நாம் முன்மொழிகின்றோம் 

02:57 PM – 20,000 ஏக்கர் காணிகளை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

02:56 PM – மொரகாகந்தை மற்றும் உமா ஓயா திட்டங்கள் விரைவில் நிறைவடையும் என்றும் நம்புகின்றோம். இதற்கு 60 045 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு  

02:53 PM – மொத்தமான கோழிகளை விற்பனைச் செய்யும் விற்பனையாளர்கள், கோழி ஒரு கிலோகிராம் 420 ரூயாய்க்கு விற்பனை செய்தல் வேண்டும். இந்தத்துறையை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

02:53 PM – யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கரையோர மாவட்டங்கள் 10க்கான ஜீவனோபாயத்தை அதிகரித்துக்கொள்வதற்கு, 1200 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு.

02:52 PM – 100 புதிய நீர்க்கிராமங்களை அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபாய் 

02:52 PM – கோழிகளின் உணவுக்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்துக்கான இறக்குமதி தீர்வை நீக்கப்படும்.

02:51 PM – ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் பகுதிகளில் மீன் பண்ணைகளை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

02:51 PM – கரையோரப் பாதுகாப்பு வலயங்களை அபிவிருத்தி செய்ய 1200 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு.
 

02:50 PM – ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள மீன்பிடித்துறையை முன்னேற்றுவதற்கு 1.2 பில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு 

02:50 PM – கரையோர மீன்பிடி வலய அபிவிருத்திக்கு 1200 மில்லியன்  ரூபாய் ஒதுக்கீடு.

02:49 PM – இறப்பர் உற்பத்திக்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

02:48 PM – தேசிய ரீதியில் பாற்பண்ணை வலங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

02:48 PM – பல்கலைக்கழக கல்விமுறைமை விரிவுபடுத்தப்படும் 

02:46 PM – திரவப் பாலுக்கான உயர் ரக கரவைப் பசுக்கள் 15 ஆயிரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

02:46 PM – இறப்பர் ஆராய்ச்சிக்கு நிறுவகத்துக்கு 50 மில்லியன் ‌‌ரூபாய் ஒதுக்கீடு.

02:46 PM – எத்தனால் இறக்குமதிக்கு 5சதவீத வரி அறவிடப்படும். உள்ளூர் சீனி உற்பத்திகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் 

02:45 PM – சீனி இறக்குமதிக்கான இறக்குமதித் தீர்வை, 2 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை

02:45 PM – கரும்பு பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் காணிகள் வழங்கப்படும் 

02:44 PM – தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, 75 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு

02:43 PM – விவசாய கூட்டுறவுக்கு சலுகைக் கடன் வழங்கப்படும் 

02:43 PM – இறப்பர் தொழிற்றுறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, 900 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.