Header image alt text

sithadthanபுதிய அரசியலமைப்பு தொடர்பான செயற்பாடுகளின் ஊடாக சித்தார்த்தன் போன்றவர்களுக்கு தலைவர் பதவிகளை வழங்கி நாட்டினை பிளவுபடுத்தும் செயற்பாட்டினை இந்த அரசாங்கம் முன்னெடுப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய பிக்குகள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை கொழும்பு 07 இல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவரான பென்கமுவே நாலகதேரர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தினை அரசியலமைப்புச் சபையாக மாற்றி இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது இந்த அரசியலமைப்பு சபையில் 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு அரசியலமைப்பு செயற்பாடுகளை இந்த அரசாங்கம் இரகசியமாக முன்னெடுத்து வருகிறது. Read more

amnesty internationalaஇறுதிக்கட்ட போரின்போது இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும் உண்மைகளை கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களுக்க நீதியை வழங்குதல் நட்ட ஈட்டை பெற்றுக் கொடுத்தல் மற்றும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகிய நான்கு விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான பொறிமுறை ஒன்றை உருவாக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

nandana-udawaththaஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

இறுதிக்கட்டப் போரில், மணலாறில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்த இராணுவத்தின் 59ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த. இறுதிக்கட்டப் போரில் வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளில் ஒருவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் இவர். Read more

fgfgfgfgfgfgfவவுனியா தோணிக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவரின் இலத்திரனியல் பொருட்கள் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வானொலி பெட்டியில் இருந்து கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழைய பொருட்களை சேகரிக்கும் ஒருவரிடம் இருந்து, குறித்த கடை உரிமையாளர், குறித்த வானொலி பெட்டியை கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

sஇலங்கையில் வெளிநாட்டவர்கள் காணி வாங்குவதற்காக போடப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையை பொறுத்த வரையில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணத் தேவை அதிகம் தேவைப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2014இல் வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி, வீடுகள் வாங்குவதைத் தடைசெய்யும் சட்டம் அமுலுக்கு வந்தது.

jayamanneஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்னே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

25 வருடத்திற்கும் அதிக காலமாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய அவர், தற்போதைய பதவிக்கு நியமிக்கும் போது மேலதிக சொலிஸ்டர் ஜெனரலாக அத்திணைக்களத்தில் பதவி வகித்துள்ளார். Read more

flight2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகியது. இன்று காலை 9 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில், நாடாளுமன்றம் கூடியது.

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பின் வாக்கெடுப்பு, இம்மாதம் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதன் பின்னர், மூன்றாவது வாசிப்பான குழுநிலை விவாதம், ஆரம்பிக்கப்படும். இந்தக் காலப்பகுதியில், அரசாங்கத் தரப்பு அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more

jonstonசொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை வழங்காமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, வெளிநாடு செல்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்தார். 2010 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதிக்கான சொத்து விபரங்கள் வெளியிடாமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக அவருக்கு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள ரத்து செய்யப்பட்டிருந்தன. Read more

atmஅரச வங்கியொன்றில் ஏ.ரி.எம். இயத்திரத்தில் ரகசிய கமராவை பொறுத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்று பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 4 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ரகசிய கமரா மூலம் வாடிக்கையாளர்களின் ரகசிய இலக்கங்களை பெற்றுக் கொண்டு அதற்கமைய போலியான ஏ.ரி.எம் அட்டைகளை தயாரித்து பணத்தை பெற்றுள்ளனர். Read more

escape-jailகுடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மிரிஹானே தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் சென்ற இந்தியப் பிரஜைகள் 05 பேரும் மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேசாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்தியா நோக்கி புறப்பட இருந்த போது பேசாலை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் தப்பிச் சென்றிருந்த 07 சந்தேகநபர்களில் 05 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.