atmஅரச வங்கியொன்றில் ஏ.ரி.எம். இயத்திரத்தில் ரகசிய கமராவை பொறுத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்று பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 4 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ரகசிய கமரா மூலம் வாடிக்கையாளர்களின் ரகசிய இலக்கங்களை பெற்றுக் கொண்டு அதற்கமைய போலியான ஏ.ரி.எம் அட்டைகளை தயாரித்து பணத்தை பெற்றுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து கணினி, கமரா, மற்றும் பல்வேறு 13 வகையான வங்கி பண அட்டைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர்கள் வெள்ளவத்தை, தோணிக்கல், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.