arrest (30)யாழ். பல்கலைகழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கடந்த மாதம் 25ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின்போது, கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவர்கள் என கூறப்பட்டு சிலர் தற்போது கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள்.

இதுவரை மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களையும் கைதுசெய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை ஆதரமாக கொண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. குறித்த கதவடைப்பு நாளன்று ஏ9 வீதி மற்றும் கிளிநொச்சி புறநகர் பகுதிகளிலும், சந்திகளிலும் டயர்களை கொழுதியவர்கள் மற்றும் கலகம் விளைவித்தவர்கள் என்பவர்களே கைது செய்யப்படுகின்றனர்.

இதேவேளை, குறித்த தினத்தன்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக கலகத்தில் ஈடுப்பட்டு, பொலிஸாரை தாக்கிய நபர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்தோடு மேலும் பலர் தேடப்பட்டும் வருகின்றனர்.