aarpattamதிருகோணமலை பொது வைத்தியசாலை தாதியர்கள் இன்றுகாலை 9.30 மணிமுதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வளாகத்தில் தாதியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வைத்திய அதிகாரியொருவர் தாதியொருவரை பொது இடத்தில் வைத்து தூற்றியதாகத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாதியர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.