robberyயாழ். கரவெட்டிப் பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி விக்கினேஸ்வரா வீதி, சண்டிக்குளம் பகுதியில் உள்ள குறித்த வீட்டினை நேற்றுக் காலை பூட்டி விட்டு சென்றவர்கள் முற்பகல் 10 மணியளவில் வீட்டிற்கு திரும்பியபோது வீடு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது. வீட்டின் சுற்று மதிலால் உட்புகுந்த திருடர்கள் கதவினை உடைத்து திறந்து உட்பகுதி அறையின் திறப்பு வைக்கப்படும் இடத்தில் திறப்பினை எடுத்து உள் கதவினைத் திறந்து நகையினை திருடியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாலiரை பவுண் தங்க நகை திருடப்பட்டதாக முறையிடப்பட்ட போதும் மேலும் சில பொருட்களும் களவாடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.