parliamentபாராளுமன்றத்திலுள்ள சகல உறுப்பினர்களினதும் விரல் அடையாளங்களை பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு வழங்குமாறு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்புக்களைப் பதிவு செய்வதற்கு நவீன தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்புக்களின்போது, சபை உறுப்பினர்கள் தங்களது விரல் அடையாளத்தைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் எனவும் அவர் அறிவித்தல் விடுத்தார்.