Header image alt text

busதனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றுமாலை நிதியமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வரவுசெலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்திருந்தனர். Read more

maampirai-people26 வருடங்களாக சொந்த நிலத்தினை இழந்து தவிக்கும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படபோதிலும் அவர்களின் மீள்குடியேற்றம் இன்னும் நிறைவேறவில்லை.

வலிகாமம் வடக்கு மாம்பிராய் கிராமம் கடந்த ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டபோதிலும் பொலிஸார் மீள்குடியேற விடாது தடுத்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை ஜே-233 கிராமசேவகர் பிரிவுக்கு உட்ப்பட்ட மாம்பிராய் கிராமம் கடந்த ஜூன் மாதம் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டது. Read more

sssddஜனாதிபதியாக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 30 இலட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் என டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் வரும் 2017 ஜனவரி 20ம் திகதியன்று ஜனதிபதியாக பதவியேற்க உள்ளார். Read more

sampanthanஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். Read more

wdereஇனங்களுக்கிடையில் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான துவேசப் பேச்சுக்களை கட்டுப்படுத்துவதற்கு சிங்கள சிவில் அமைப்புக்கள், நல்லெண்ண முற்போக்கு சக்திகள் உடனடியாக முன்வரவேண்டும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

பௌத்த தேரரின் இனத்துவேச பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வீதியிலிறங்கி போராடுவதற்கு எந்தவிதமான தயக்கமும் இல்லாதிருக்கின்றபோதும் தற்போதைய சூழலில் அது சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்களின் போராட்டமாக சித்தரிக்கப்படும் அபாயமுள்ளதால் பொறுமை காப்பதாகவும் அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டினார். Read more

appointedஉயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் வைத்து அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள், இன்று ஜனாதிபதியிடம் தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.

australia_navyபாக்கு நீரிணையில் இந்திய – இலங்கைக் கடற்படைகள் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்த இலங்கையின் யோசனையை இந்தியா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இணங்கியுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தக் கூட்டு ரோந்து நடவடிக்கையை மேற்கொள்வது குறித்த யோசனையை இலங்கை, நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது. எனினும், இந்தியா அதற்கு இணங்கவில்லை. Read more

jasmni xookaஇலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இராணுவம் உட்பட அரச படையினர் தொடர்ந்தும் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டும், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்,

இவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு இலங்கைக்கு நேரடியாக விஜயம்செய்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. Read more

busவரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 2500ரூபா தண்டப் பணத்துக்கு எதிராக தனியார் பஸ் ஊழியர்கள் இன்று நள்ளிரவுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகல பஸ் சங்கங்களுடனும் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும், இதற்காக அனைத்து பஸ் சங்கங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். Read more

reginold coorayவடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் அச் சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை அனுப்பிவைக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையை மேற்கொள்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான குழுவிற்கான அனுமதியினை வழங்குமாறும், இதற்கான நிதி அனுமதியும் ஆளுநரிடம் கோரப்பட்டிருக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more