deadபிதிர்க்கடன் செய்யச் சென்ற குடும்பஸ்தர் கீரிமலை தீர்த்தக்கேணியில் நீராடியவேளை நீரில் மூழ்கி பரி தாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அஸ்தியினை கரைப்பதற்காக உறவினர்களுடன் சேர்ந்து கீரிமலைக்கு சென்றிருந்த பிரஸ்தாப குடும்பஸ்தர் அங்கு மாலை 6 மணியளவில் நீராடியபோதே மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேலழகன் சுபாஸ்கரன் (வயது-40) என்ற குடும்பஸ்தரே பரிதா பகரமாக உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காங்கேச்துறை பொலிஸார் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.