Header image alt text

deadபிதிர்க்கடன் செய்யச் சென்ற குடும்பஸ்தர் கீரிமலை தீர்த்தக்கேணியில் நீராடியவேளை நீரில் மூழ்கி பரி தாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அஸ்தியினை கரைப்பதற்காக உறவினர்களுடன் சேர்ந்து கீரிமலைக்கு சென்றிருந்த பிரஸ்தாப குடும்பஸ்தர் அங்கு மாலை 6 மணியளவில் நீராடியபோதே மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேலழகன் சுபாஸ்கரன் (வயது-40) என்ற குடும்பஸ்தரே பரிதா பகரமாக உயிரிழந்தவராவார். Read more

mahinda (4)வடக்கு கிழக்கிலுள்ள பௌத்தர்களையும், பௌத்த அடையாள சின்னங்களையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

அளுத்கமபகுதியிலுள்ள விகாரையொன்றில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அநேகமான இடங்களில் விகாரைகள் மூடப்பட்டு வருகின்றன. வடக்கில் அது வேகமாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். Read more