Header image alt text

hgggggggggggggமட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தினை முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றுகாலை முன்னெடுக்கப்பட்டது.

இன்றுகாலை 8.30மணியளவில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் பட்டிப்பளை பிரதேச சிவில் சமூக அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச செயலக வாயில் கதவினை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொக்கட்டிச்சோலை-வெல்லாவெளி பிரதான வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more

ssssssssssssபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமாரின் வங்கிக் கணக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின், வங்கிக் கணக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. யாழ் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட பின்னர், சுவிஸ்குமார் எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றத்தடுப்பு புலனாய்வுபிரிவு பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். Read more

வவுனியாவில் முதல் முறையாக தேசிய ரீதியில் வெற்றீயீட்டிய நாடகங்களின் காட்சிகள்.

unnamedஇடம் :- வவுனியா காமினி மகா வித்தியாலயம்
காலம் :- 20ஃ11ஃ2016(ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- 1ம் காட்சி – மு.ப. 10.30
2ம் காட்சி – பி.ப. 4.30
தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற நாடகங்களான
“பொய் முகம்”,
“நீருக்குள் நெருப்பு” ,
“ரூ மேன் ரூ வோமேன் டெத் ஆப்ட்டர் பீஸ்” ஆகிய மூன்று நாடகங்களின் காட்சிகளை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்படும். Read more

weeewwயாழ்.மாநகர சபை சுகாதாரத் தொழிலாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்குடா நாட்டிலுள்ள அனைத்து சுகாதாரத் தொழிலாளிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் எட்டாவது நாளாகவும், இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், யாழ்.குடாநாட்டிலுள்ள அனைத்து நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் சுகாதாரத் தொழிலாளிகளும் அவர்களுக்கு ஆதரவாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். Read more

german-help-12-11-4விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் 12.11.2016 சனிக்கிழமையன்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோணாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த திருமதி இரகுநாதன் நாகேஸ்வரி என்பவருக்கு வாழ்வாதார உதவியினை வழங்கியிருந்தனர்.

மறைந்த ஜேர்மன் கிளை உறுப்பினர் கார்த்திகேசு சிவகுமாரன் (தோழர் சுப்பர்)அவர்களின் முதலாம் வருட நினைவையொட்டி இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் வறுமையான நிலையில் சிறிய கடை ஒன்றினை நடாத்திவரும் திருமதி நாகேஸ்வரி அவரது வர்த்தகத்தினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ரூபா 25,000/- வழங்கப்பட்டுள்ளது. Read more

thissa-vitharanaமுன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுண கட்சியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இடதுசாரிக் கட்சிகள் சில இணைந்து இன்று கொழும்பில் மேற்கொண்ட ஊடகவிலாளர் சந்திப்பின் போதே இதனைக் கூறியுள்ளனர். தான் மற்றும் வாசுதேவ நாணயக்கார, டிவ் குணசேகர உள்ளிட்டோர் இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக திஸ்ஸ விதாரண இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

lightningமுல்லைத்தீவு மல்லாவி திருநகர் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை, அதில் ஒருவர் பலியாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவர் திருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

accidentஇலங்கையில் இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் வாகன விபத்தினால் 2200 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் குறித்த வாகன விபத்துக்களினால் அதிகளவிலான பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற பாதுகாப்பு கடவை, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியமை, வீதி ஒழுங்கு முறைமை களை கடைப்பிடிக்காமை போன்றன காரணமாகவே அதிக வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. Read more