ssssssssssssபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமாரின் வங்கிக் கணக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின், வங்கிக் கணக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. யாழ் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட பின்னர், சுவிஸ்குமார் எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றத்தடுப்பு புலனாய்வுபிரிவு பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். குறித்த மேலதிக விசாரணைக்காக, சுவிஸ்குமாரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தப்பி செல்ல பணபரிமாற்றம் ஏதேனும் நடைபெற்று உள்ளதா எனது தொடர்பில் 16 வங்கி முகாமையாளர்களை விசாரணை செய்ய மன்று அனுமதிக்க வேண்டும் என கோரி இருந்தனர். அதற்கான அனுமதியினை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.