lightningமுல்லைத்தீவு மல்லாவி திருநகர் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை, அதில் ஒருவர் பலியாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவர் திருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.