sfdfபேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

அப் பல்கலையின் கலைப் பிரிவைச் சேர்ந்த முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இறுதி வருட மாணவர்களின் வழியனுப்பும் நிகழ்வு தொடர்பில் அழைப்பிதல் வழங்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என தெரியவருகிறது. இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் ஐவரும் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.