ereகுருநாகல் ரத்தரவூவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரத்தருவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத கார் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, காருக்குள் இருந்த இருவரால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின் போது உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவத்தை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.