swordஇனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் பொலிசாரால் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் இன்று இரவு 7.00 மணியளவில் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்லுன்டாய்வெளி பிரதேசத்தில் வெட்டுக்காயத்துடன் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் துடிதுடித்த நிலையில் கிடப்பதைக் கண்டு அப்பகுதியால் சென்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் பிரகாரம் மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன், வெட்டுக்காயங்களுக்கு இலக்கானவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் யாழ் செய்திகளுக்கு….யாழில் திருட்டுக் குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் இளைஞரும் கைது
 
policeதிருட்டு குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் திட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரும், 19 வயதுடைய இளைஞர் ஒருவருமே நேற்று புதன்கிழமை இரவு இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் அவர்களது வீட்டில் வைத்தே கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்படும் போது, அவர்களது உடமையில் இருந்து 2 மடிக்கணனிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றும், குறித்த இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

கேரளா கஞ்சாவுடன் யாழில் யுவதி ஒருவர் கைது
 
police ...யாழ் மாதகல் கடற்கரை பகுதிக்கு அருகாமையில், ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வூர் மக்களால் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு மாறு வேடத்தில் சென்ற பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.

இதன்போது அந்தப் பெண்ணிடமிருந்து 09 கிலோவும் 305 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மாதகல் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொஸிசார் மேற்கொண்டு வருகின்றனர்