Header image alt text

raniஅரசியல்யாப்பு பேரவை இன்று காலை இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது.

இதன்போது அரசியலமைப்பு பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உபகுழுக்களின் 6 அறிக்கைகள் அரசியல் யாப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read more

ranilநாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் குழுநிலை விவாதம் இன்று காலை பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள் பாராளுமன்றம் உள்ளிட்ட மேலும் 22 விடயங்கள் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. Read more

mcslஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கையர் இணைந்துள்ளதாக பாராளுமன்றில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்த தகவலுக்கு முஸ்லிம் கவுன்சில் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பொது மக்களை தவறாக வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐஎஸ் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்ததாகவும், அதன்பின்னர் ஐஎஸ் உடன் தொர்புடைய இலங்கையர் குறித்த எவ்வித உறுதியான தகவல்களும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Read more