Header image alt text

electric-trainஇலங்கையில் மின்சார ரயில் சேவையை அறிமுகம் செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க கூறுகையில், கடந்த ஜூலை மாதமளவில் இதற்கான வேலைத்திட்டத்தினை எதிர்பார்க்க நாம் ஆரம்பித்துள்ளோம். களனிவெளி ரயில் பாதை மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்வது இலக்காகும் இலங்கையில் மின்சார ரயிலை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூற்று அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

n-1தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெடுங்கேணி பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு சதீஸ்குமார் அவர்களின் தலைமையில் 18.11.2016 வெள்ளிக்கிழமை தொடக்கம் 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை வரை வவுனியா மதியாமடு விவேகானந்த வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் இளைஞர்களின் தலைமைத்துவ வழிகாட்டல் முகாமில் நடைபெற்ற தீப்பாசறை நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன், சமளங்குளம் கிராம சேவையாளர் திரு மா.சுரேந்தர், நெடுங்கேணி பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன தலைவர் திரு இ.சஜீவன் ஆகியோருடன் வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு அஜித் சந்திரசேன, நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

hospitalபதிவு செய்யப்படாமல் இயங்கிவரும் தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் வைத்திய நிலையங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தனியார் வைத்திய சேவைகளை ஒழுங்குபடுத்தும் சபையின் செயலாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், தனியார் வைத்திய நிலையங்களை பதிவு செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஒரு கட்டணம் அறவிடப்படும். தனியார் வைத்திய நிறுவனங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும். 2017ஆம் ஆண்டுக்கான பதிவை முன்னிட்டு ஒக்டோபர் மாதத்திலேயே சில தனியார் வைத்திய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. Read more

dfdfdஇந்த நாட்டிலே தமிழ் மக்களின் இருப்பை நிலை நிறுத்த கூடியவர்கள், எமது மாணவச்செல்வங்களே என வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் இந்த நாட்டிலே ப்ரிட்டிஷ் காலத்திலும் சரி 1970 வரை அரசாங்கத்தின் மிக முக்கிய உயர் பதவிகளில் தமிழ் அதிகாரிகளே கடமையாற்றி இருந்தார்கள். இலங்கை அரசியல் அமைப்பின் மாற்றத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழ் அதிகாரிகளின் நியமனம் படிப்படியாக இன நோக்கோடு ஒதுக்கப்பட்ட நிலையே இன்று வரை நிலவுகின்றது. Read more

sfeவவுனியா, பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலிருந்து 59வயது ஆண், சடலமாக செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி, என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், கொழும்பில் சத்திரசிகிச்சை செய்துக்கொண்டுள்ளார். Read more

dgfகனடாவின் டொரன்டோவில் வசிக்கும் ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தபோது, சித்திரவதை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில், நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு இலங்கைக்கு தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ரோய் சமாதானம் (46) என்பவர், 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் நாட்டுக்கு வந்திருந்தார். அந்த நேரத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், சிங்கப்பூரில் இருந்து நண்பரால் வர்த்தகத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த 600 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றினர். Read more

sfdfஜனாதிபதியின் அறிவுறுத்தலின்பேரில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்த வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மிதிவெடிகள் இரண்டும் எறிகணை ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழைகாலம் என்பதால் நீர் நிரம்பி இருக்கும் இடங்களை துப்பரவு செய்யும்போது இவை மீட்கப்பட்டுள்ளன. பொஸிஸ் விசேட பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து மீட்கப்பட்ட இவை, பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டதாக தெல்லிப்பளை பொஸிசார் தெரிவித்துள்ளனர். தையிட்டி கிழக்கில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இராணுவ காவலரணிற்கு அருகிலேயே இவை மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.