sfdfஜனாதிபதியின் அறிவுறுத்தலின்பேரில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்த வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மிதிவெடிகள் இரண்டும் எறிகணை ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழைகாலம் என்பதால் நீர் நிரம்பி இருக்கும் இடங்களை துப்பரவு செய்யும்போது இவை மீட்கப்பட்டுள்ளன. பொஸிஸ் விசேட பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து மீட்கப்பட்ட இவை, பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டதாக தெல்லிப்பளை பொஸிசார் தெரிவித்துள்ளனர். தையிட்டி கிழக்கில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இராணுவ காவலரணிற்கு அருகிலேயே இவை மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.