courtsஓய்வுப் பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.என்.சரத்சந்திரவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு சொந்தமான ஜீப் வண்டியை மோடியாக பாவித்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்தபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.