drawnமட்டக்களப்பு, ஏறாவூர், புன்னகுடா கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த 17வயதான இரண்டு மாணவர்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று நீராடச் சென்றவேளை, அவர்களில் மூவர் கடல் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இதன்போது அந்த மூவரில் ஒருவரான 17வயதான சேகுதாவூத் அக்ரம் காப்பாற்றப்பட்டதுடன், ஏனைய இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கல்விகற்கும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் மற்றும் ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் பங்குடாவெளியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன்

ஆகிய இரு மாணவர்களினது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மாணவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படையினரும், பொலிஸாரும் மற்றும் பொதுமக்களும் ஈடுபட்டிருந்தனர்.