04img_8584தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், சுவிஸ் வாழ் அன்பரின் தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு தொகுதி அன்பளிப்பு பொருட்களும், மதிய உணவும் இன்றையதினம்(27.11.2016) வவுனியா செட்டிகுளம் உள நல காப்பகமான “மகிழ்வகம்” நிலையத்தில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இன்றையதினம் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அழைப்பின் பெயரில் வருகைதந்த அதிதிகளான வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு சி.ரவீந்திரன் ஆகியோரினால் அன்பளிப்பு பொருட்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி எஸ்.நர்மதா, மகிழ்வகம் தாதிய உத்தியோகத்தர் திருமதி ஜெ.சந்திரகலா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. 

இன்றைய நிகழ்வுகளில்  தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா பொது வைத்தியசாலையின் உள நல விடுதியின் தாதிய உத்தியோகத்தர் திரு சோ.சுதாகர், வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கலாசார பிரிவின் இணைப்பாளர் திரு ரி.பிரகாஷ்கர்,  தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடக இணைப்பாளர் திரு பி.கெர்சோன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் திரு ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

01img_8597 02img_8588 03img_8581 04img_8584 05img_8586 06img_8570 img_8492 img_8497 img_8503 img_8504 img_8512 img_8516 img_8539 img_8541 img_8545