Header image alt text

03யாழ். குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மேற்படி விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று (29.11.2016) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15அளவில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சிறீமோகன், குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திரு. செல்வரட்ணம், விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு. துஸ்யந்தன் மற்றும் பாடசாலை மாணவர்களும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். Read more

karunaவிடுதலைப் புலிகள் இயக்த்தின் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதி ‘கர்னல்’ கருணா, எனப்படும், விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரை இன்று காலை விசாரணைக்கு வருமாறு நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் அழைத்தி்ருந்தனர். அப்போது சில மணி நேரங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்ததாகப் போலிசார் கூறினர். Read more

rathakrisnanஇலங்கையில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கு மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு முன்னணி தயாராகிவருவதாக அம் முன்னணியின் தலைவர்களில் ஒருவரான கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிரூணஸ்ணன் தெரிவித்திருக்கின்றார்.

இரு சாராரும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு செயல்பட முடியும் என நுவரெலியா மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார். Read more

indiaஇந்திய நிர்வாகத்துக்குட்பட்ட ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் நடந்து வரும் துப்பாக்கி மோதலில், ஒரு ராணுவ அதிகாரி உட்பட மூன்று இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ;மீரின் ஜம்மு பகுதியில், மிக தீவிரமாக செயல்படும் இந்திய ராணுவ தளமான நக்ரோடா பகுதியில் இந்த மோதல் நடந்து வருகிறது.
 
செவ்வாய் அன்று காலை, பலத்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் பீரங்கி ரெஜிமென்ட் முகாமைத் தாக்கினர். இந்த நடவடிக்கை தொடரும் நிலையில், எங்களது படையினர் இறந்தவர்கள் குறித்து எதுவும் சொல்லமுடியாது,” என ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் மனீ மேத்தா பிபிசியிடம் கூறினார். Read more