indiaஇந்திய நிர்வாகத்துக்குட்பட்ட ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் நடந்து வரும் துப்பாக்கி மோதலில், ஒரு ராணுவ அதிகாரி உட்பட மூன்று இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ;மீரின் ஜம்மு பகுதியில், மிக தீவிரமாக செயல்படும் இந்திய ராணுவ தளமான நக்ரோடா பகுதியில் இந்த மோதல் நடந்து வருகிறது.
 
செவ்வாய் அன்று காலை, பலத்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் பீரங்கி ரெஜிமென்ட் முகாமைத் தாக்கினர். இந்த நடவடிக்கை தொடரும் நிலையில், எங்களது படையினர் இறந்தவர்கள் குறித்து எதுவும் சொல்லமுடியாது,” என ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் மனீ மேத்தா பிபிசியிடம் கூறினார்.பாகிஸ்தானோடு உள்ள கொந்தளிப்பான நிலையில் உள்ள எல்லை பகுதியை பாதுகாக்கும் பணியில் இந்த இந்திய ராணுவ வடக்கு கட்டளை பிரிவு செயல்படுகிறது.
மேலும் தற்போது காஷ;மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும் அது நடத்தி வருகிறது.

வேறு ஒரு சம்பவத்தில், அருகிலுள்ள சம்பா என்ற நகரத்தில் ஊடுருவிய மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதாகவும் இந்திய எல்லைப் படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

சமீபத்தில் நடந்த மோசமான தீவிரவாத தாக்குதலில் ஒரு ராணுவ முகாமில் 19 இந்திய படையினர் கொல்லப்பட்ட பிறகு, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட காஷ;மீரில் வன்முறை அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 29ம் தேதி இந்திய ராணுவம், பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ;மீர் பகுதியில், துல்லிய தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது. இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.