Header image alt text

20161201_145304யாழ். தெல்லிப்பழை பன்னாலை சேர் கனகசபை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா-2016 நிகழ்வு பாடசாலையின் பொன்னையா கலையரங்கில் பாடசாலையின் அதிபர் திரு. கதிரேசு பத்மநாதன் அவர்களின் தலைமையில் இன்று (01.12.2016) வியாழக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. மாணிக்கம் ஆனந்தகுமார் (கோட்டக்கல்வி அலுவலர், தெல்லிப்பழை கோட்டம்), திரு. சிவப்பிரகாசம் துர்க்கானந்தன் (பழைய மாணவர், நில அளவையாளர் -மன்னார்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து ஆசியுரையினை பிரம்மஸ்ரீ ம.மகேந்திரசர்மா (பிரதமகுரு, வரத்தலம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்) அவர்கள் வழங்கினார். Read more

20161201_124556யாழ். புத்தூர் புத்தகலட்டி ஸ்ரீ விஸ்ணு வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-2016 நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் பாடசாலை முதல்வர் திரு. க.செந்தில்வடிவேல் அவர்களின் தலைமையில் இன்று(01.12.2016) வியாழக்கிழமை காலை 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. நா.சிவநேசன் (கோட்டக் கல்விப்பணிப்பாளர் கோப்பாய் கோட்டம்), திரு. அ.பரஞ்சோதி (பழைய மாணவர், மாகாணசபை உறுப்பினர்) ஆகியோரும், கௌரவ விருந்தினராக திரு. பா.பாலகுமார் (நலன் விரும்பி டென்மார்க்) அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றதை அடுத்து தலைவர் உரை மற்றும் விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. Read more

20161130_150132யாழ். சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு விழா-2016 நிகழ்வானது பாடசாலை அதிபர் திருமதி ம.குணபாலன் அவர்களது தலைமையில் நேற்று 30.11.2016 புதன்கிழமை பிற்பகல் 1.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. ந.காண்டீபன் (பிரதிக் கல்விப்பணிப்பாள் கல்வி அபிவிருத்தி, வலிகாமம் வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. வ.ஜெயரூபன்(பழைய மாணவர், சிரேஸ்ட விரிவுரையாளர், தேசிய சமூக சேவைகள் திணைக்களம்) அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றதை அடுத்து பாடசாலை மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. தொடர்ந்து விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றன.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
Read more

20161130_090153யாழ். கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா-2016 நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களது தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நேற்று 30.11.2016 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. நா.சிவநேசன் (கோட்டக்கல்விப் பணிப்பாளர், கோப்பாய்) அவர்களும், கௌரவ விருந்தினராக செல்வி ஏ.கார்த்திகா (பாழைய மாணவி, கனிஸ்ட நிறைவேற்று உத்தியோகத்தர், உரும்பிரயர் கிளை, இலங்கை வங்கி) அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டு சரஸ்வதி வழிபாடு இடம்பெற்றது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றதை அடுத்து பாடசாலை மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றன.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
Read more